கோவை: வால்பாறையில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ 5 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை: வால்பாறையில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ 5 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நலத் திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமை வகித்தார். தமிழக உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து, 989 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 46 பேர்களுக்கு உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா 53 பேருக்கும், வன விலங்கு தாக்கி இறந்த 4 குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை, 40 பேருக்கு தையல் இயந்திரம், 15 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், 51 பேர்களுக்கு ஈமச்சடங்கு தொகை, சலவை இயந்திரம் உட்பட ரூ 5 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரத்து எழுபத்து நான்கு ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட அமைச்சருக்கு வால்பாறை அ.தி.மு.க சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக, 51 புதிய சிறிய உயர் மின் கோபுர விளக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, முன்னாள் எம்.பி.மகேந்திரன், முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாவட்ட வருவாய் அலுவலர், பொள்ளாச்சி கோட்டாட்சியர் அனைத்து துறை அலுவலர்கள் காவல்துறையினர் கட்சி நிர்வாகிகள், பயனாளிகள் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நலத் திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமை வகித்தார். தமிழக உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்பு திட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து, 989 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 46 பேர்களுக்கு உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா 53 பேருக்கும், வன விலங்கு தாக்கி இறந்த 4 குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை, 40 பேருக்கு தையல் இயந்திரம், 15 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், 51 பேர்களுக்கு ஈமச்சடங்கு தொகை, சலவை இயந்திரம் உட்பட ரூ 5 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரத்து எழுபத்து நான்கு ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட அமைச்சருக்கு வால்பாறை அ.தி.மு.க சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக, 51 புதிய சிறிய உயர் மின் கோபுர விளக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, முன்னாள் எம்.பி.மகேந்திரன், முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாவட்ட வருவாய் அலுவலர், பொள்ளாச்சி கோட்டாட்சியர் அனைத்து துறை அலுவலர்கள் காவல்துறையினர் கட்சி நிர்வாகிகள், பயனாளிகள் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.