திருப்பூர்: திருப்பூர் அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த குமார்(20) என்பவர் கோவை கே.சி.டி பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப்(19) என்ற இவரது நண்பரும் சேர்ந்து அரவிந்தகுமாரின் ஆர்15 இருசக்கர வாகனத்தில் கோவையில் இருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் பள்ளகவுண்டம்பாளையம் மின் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த குமார்(20) என்பவர் கோவை கே.சி.டி பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார். இவரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப்(19) என்ற இவரது நண்பரும் சேர்ந்து அரவிந்தகுமாரின் ஆர்15 இருசக்கர வாகனத்தில் கோவையில் இருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் பள்ளகவுண்டம்பாளையம் மின் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.