பணத்தை ஆசீர்வதித்து தருவதாக கூறி வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள்; ரத்தினபுரி காவல்நிலையத்தில் புகார்

கோவை: கோவை டாடாபாத் அருகே திருநங்கைகள் மூன்று பேர் இளைஞரிடம் பணத்தை ஆசிர்வதித்து தருவதாக கூறி 10 ஆயிரத்து 500 ரூபாயை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை டாடாபாத் அருகே திருநங்கைகள் மூன்று பேர் இளைஞரிடம் பணத்தை ஆசிர்வதித்து தருவதாக கூறி 10 ஆயிரத்து 500 ரூபாயை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் கதிரவன் நகர் பகுதியை சேர்ந்தவர் இம்ரான்கான் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 



இப்படியிருக்க அவர் தனது பணிநிமித்தம் டாடாபாத் ஒன்பதாவது வீதியில் உள்ள நிறுவனத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்ப தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துள்ளார், 

அப்போது அங்கே வந்த மூன்று திருநங்கைகள் இம்ரான்கானிடம் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். 

இதையடுத்து இம்ரான் கான் பத்து ரூபாய் கொடுத்தபோது அதை இம்ரான்கான் தலையில் வைத்து ஆசீர்வதிப்பது போல ஏமாற்றி அவரது பாக்கெட்டுக்குள் கைவிட்டு உள்ளனர். இதையடுத்து அவரது பாக்கெட்டில் இருந்த 10 ஆயிரத்து ஐநூறு ரூபாயை பறித்து அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதையடுத்து இம்ரான் கான் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்து வருகின்றனர்.

கோவையில் கடந்த சில நாட்களாகவே திருநங்கைகள் பணத்தை ஆசீர்வதித்து தருவதாக வழிப்பறியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...