நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள 283 இடங்களில் முதல்நிலை ஆய்வாளர்கள் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வினை மேற்கொண்ட பின்னரே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் உள்ள 283 இடங்களில் முதல்நிலை ஆய்வாளர்கள் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வினை மேற்கொண்ட பின்னரே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு, பேரிடர் அபாயம் உள்ள 283 இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முதல் நிலை ஆய்வாளர்கள் மற்றும் சுரங்கத் துறை, வனத்துறை மற்றும் பொறியியல் துறையின் மூலம் மூன்று குழுக்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்ட பின்னரே கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி பெற முடியும் என தெரிவித்தார்.
மேலும் ஓவேலிப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்குத் தமிழக அரசின் மூலம் 20 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இதில் 789 குடியிருப்புகளுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, நடைபாதை வசதி, சாலை வசதிகள் உள்ளிட்டவற்றை உச்சநீதிமன்ற உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்றார்.
அதேபோல, கல்லட்டியிலிருந்து மசினகுடி செல்லும் தாழ்வான மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டுமென மசினகுடி பகுதி சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், வெளிமாநில வாகனங்கள் மலைப்பாதையில் இயக்கும் பொழுது, தொடர்ந்து ஏற்படும் விபத்துகளால் மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் விபத்துகள் தடுக்கும் பொருட்டு கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களை இயக்க தொடர்ந்து தடை நீட்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு, பேரிடர் அபாயம் உள்ள 283 இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முதல் நிலை ஆய்வாளர்கள் மற்றும் சுரங்கத் துறை, வனத்துறை மற்றும் பொறியியல் துறையின் மூலம் மூன்று குழுக்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்ட பின்னரே கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி பெற முடியும் என தெரிவித்தார்.
மேலும் ஓவேலிப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்குத் தமிழக அரசின் மூலம் 20 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. இதில் 789 குடியிருப்புகளுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, நடைபாதை வசதி, சாலை வசதிகள் உள்ளிட்டவற்றை உச்சநீதிமன்ற உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமான பணிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்றார்.
அதேபோல, கல்லட்டியிலிருந்து மசினகுடி செல்லும் தாழ்வான மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டுமென மசினகுடி பகுதி சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், வெளிமாநில வாகனங்கள் மலைப்பாதையில் இயக்கும் பொழுது, தொடர்ந்து ஏற்படும் விபத்துகளால் மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் விபத்துகள் தடுக்கும் பொருட்டு கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனங்களை இயக்க தொடர்ந்து தடை நீட்டிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.