கோவை மாநகராட்சி ஸ்மார்ட்‌ சிட்டி வளர்ச்சிப்‌ பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ நேரில்‌ ஆய்வு

கோவை: கோவை மாநகராட்சியில்‌, ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சித்‌ திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ முனைவர்‌ கா.பாஸ்கரன்‌ அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்களுடன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌, ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சித்‌ திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ முனைவர்‌ கா.பாஸ்கரன்‌ அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்களுடன்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி, வாலாங்குளம்‌ நடைபாதை ரூ.24.31 கோடி மதிப்பிலும்‌, வாலாங்குளம்‌ (மேம்பாலத்தின்‌ அடியில்‌ ரூ.23.83 கோடி மதிப்பிலும்‌ நடைபெற்று வருகிற வளர்ச்சிப்‌ பணிகளையும்‌, உக்கடம்‌ பெரிய குளக்கரையில்‌ ரூ.224.10 கோடி மதிப்பிலும்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சிப்‌ பணிகளையும்‌, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.22 மாநகராட்சி பாரதி பூங்கா அருகில்‌ உணவு கழிவுகள்‌ மற்றும்‌ காய்கறி கழிவுகளிலிருந்து பயோ கேஸ்‌ மூலம்‌ மின்சாரம்‌ உற்பத்தி செய்யும்‌ மையத்தின்‌ செயல்பாடுகளை நேரில்‌ பார்வையிட்டும்‌ நகராட்சி நிர்வாக ஆணையாளர்‌ முனைவர்‌ கா.பாஸ்கரன்‌ ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார். மேலும், மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, செயற்பொறியாளர்‌ சரவணகுமார்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.



முன்னதாக, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தின்‌ முன்பு பெரிய கடை வீதியில்‌ மாநகராட்சி சார்பில்‌ சாலைகளில்‌ பாதசாரிகள்‌, சைக்கிளில்‌ செல்லும்‌ பொதுமக்களுக்கு வசதிகள்‌ செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ வகையில்‌ வண்ணம்‌ தீட்டப்பட்டிருந்த பணிகளை நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர் வழங்கல்‌ துறை அரசு முதன்மைச்‌ செயலாளர்‌ ஹா்மந்தர் சிங்‌, இ.ஆ.ப., அவர்கள்‌ துவக்கி வைத்து பார்வையிட்டார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...