டெல்லி: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
டெல்லி: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் 70வது ஆண்டு தினத்தையொட்டி, நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை முன்பாக ஒன்று திரண்டு ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, சிவசேனாவின் அரவிந்த் சாவத், திமுகவின் ஆ. ராசா, மார்க்சிஸ்ட் கட்சியின் ரங்கராஜன், கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி ஆர் நடராஜன், மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் 70வது ஆண்டு தினத்தையொட்டி, நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை முன்பாக ஒன்று திரண்டு ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி, சிவசேனாவின் அரவிந்த் சாவத், திமுகவின் ஆ. ராசா, மார்க்சிஸ்ட் கட்சியின் ரங்கராஜன், கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி ஆர் நடராஜன், மதிமுக பொதுச் செயலாளரும் ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.