குட்கா, பான் மசாலா சோதனையில் போலீசார் தீவிரம்: ஒரு மாதத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவை மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டு வரும் பான்மசாலா குட்கா பொருட்களை தடை செய்ய தொடர்ந்து செயல்பட்டு வரும் மாநகர காவலர்களுக்குப் பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையாளர் நற்சான்றிதழ் வழங்கினார்.


கோவை: கோவை மாநகரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டு வரும் பான்மசாலா குட்கா பொருட்களை தடை செய்ய தொடர்ந்து செயல்பட்டு வரும் மாநகர காவலர்களுக்குப் பாராட்டுகளை தெரிவித்த காவல் ஆணையாளர் நற்சான்றிதழ் வழங்கினார்.

தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் கோவை மாநகரில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான்மசாலா குட்கா பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இந்த குட்கா பொருட்கள், பயன்படுத்துபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு சுவைகளிலும் தயாரிக்கப்பட்டு கவர்ச்சிகரமான பாக்கெட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை மாநகரை பான் மசாலா குட்கா பொருட்கள் பயன்படுத்தாத நகரமாக மாற்ற மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில், துணை ஆணையாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பாலாஜி சரவணன் அவர்களின் தலைமையிலான தனிப்படை குழுவினர் பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மறைமுகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மாதம் மட்டும் நடைபெற்ற ரோந்து பணிகளின் மூலம் முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , சுமார் ஒரு கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநகர போலீசாரின் தீவிர நடவடிக்கைகளுக்கு காவல் ஆணையாளர் சுமித் சரண் பாராட்டு தெரிவித்துள்ளார்.



மேலும், பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் தனிப்படை குழுவினருக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில், மாநகர காவல் துணை ஆணையாளர் சட்டம் ஒழுங்கு பாலாஜி சரவணன், குற்றப்பிரிவு துணை ஆணையாளர் உமா, போக்குவரத்து துணை ஆணையாளர் முத்தரசு, தலைமையகம் துணை ஆணையாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...