கோவையில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவை அடுத்த துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் தாய் உட்பட குழந்தைகள் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சந்தேக மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அடுத்த துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் தாய் உட்பட குழந்தைகள் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சந்தேக மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் வ.ஊ. சி.,நகர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் சிவகுமார் மற்றும் கெளரி(29). 



இவர்களுக்கு திவ்யதர்ஷினி (13), பிரனேஷ் (11) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளுக்கும் மனவளர்ச்சி குன்றி உள்ளதால் இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசின் சிறப்பு பள்ளியில் படித்து வருகின்றனர்.

மேலும், கணவர் சிவகுமார் பல்வேறு காரணங்களைச் சொல்லி தினமும் குடித்து வருவதால் மனைவி கௌரிக்கும் அவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் கௌரி கடந்த சில மாதமாக துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட அதே பகுதியில் தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கௌரியின் வீட்டார் உறவினரின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க வெளியூர் சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பியபோது கதவு திறக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவரின் தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது, கௌரி உட்பட குழந்தைகள் 2 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர்.



இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த துடியலூர் போலீசார், இறந்த நிலையில் உள்ள மூன்று பேரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், தாய் உட்பட இரண்டு குழந்தைகளின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் தலைமறைவாக இருந்த கௌரியின் கணவர் சிவக்குமாரை பிடித்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...