கோவை: மேட்டுப்பாளையம் அருகே போலி தங்க கட்டிகளை கொடுத்து துணிக்கடை பெண் உரிமையாளரை ஏமாற்றிய பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே போலி தங்க கட்டிகளை கொடுத்து துணிக்கடை பெண் உரிமையாளரை ஏமாற்றிய பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியினை சேர்ந்தவர் கவிதா. இவர் அதே பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு துணி எடுக்க அடிக்கடி வரும் லட்சுமி என்பவருடன் கவிதாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு நாள் கடைக்கு வந்த லட்சுமி, தனது கணவர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே தனக்கு அதன் மூலம் தங்க கட்டிகள் கிடைத்துள்ளது என்றும் ஆனால் தனது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அதனை விற்றுக் குடித்து விடுவார் என்று அச்சமாக உள்ளதால் தங்க கட்டிகளை வைத்துக் கொண்டு பணம் தருமாறு கேட்டுள்ளார். இதற்காக மாதிரியாக சிறிய கட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அப்போது, அது உண்மையான தங்கமாக இருந்ததால், அதனை நம்பி சுமார் இரண்டு லட்சம் பேசி முடிவு செய்து அரை கிலோ தங்கக் கட்டியை கவிதாவிடம் லட்சுமி கொடுத்துள்ளார். பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு அதனைப் பரிசோதனை செய்த போது, அது தங்கம் முலாம் பூசப்பட்ட போலி தங்கக்கட்டி என தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, லட்சுமியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் தலைமறைவாகி உள்ளார். இந்த நிலையில் இன்று காரமடையில் அதே பாணியில் தங்க கட்டிகளை வைத்து மற்றொருவரிடம் லட்சுமி பேரம் பேசியதாக தோழிகள் மூலம் தகவல் கிடைக்கப் பெற்று காரமடை வந்த கவிதா, லட்சுமியை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
பின்னர் கைதான லட்சுமியிடம் விசாரித்ததில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தொடர்ந்து இதுபோன்று பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலி தங்க கட்டிகளை வைத்து ஏமாற்றிய பெண்ணை கைது செய்த பெரியநாயக்கண்பாளையம் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியினை சேர்ந்தவர் கவிதா. இவர் அதே பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு துணி எடுக்க அடிக்கடி வரும் லட்சுமி என்பவருடன் கவிதாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு நாள் கடைக்கு வந்த லட்சுமி, தனது கணவர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் எனவே தனக்கு அதன் மூலம் தங்க கட்டிகள் கிடைத்துள்ளது என்றும் ஆனால் தனது கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அதனை விற்றுக் குடித்து விடுவார் என்று அச்சமாக உள்ளதால் தங்க கட்டிகளை வைத்துக் கொண்டு பணம் தருமாறு கேட்டுள்ளார். இதற்காக மாதிரியாக சிறிய கட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அப்போது, அது உண்மையான தங்கமாக இருந்ததால், அதனை நம்பி சுமார் இரண்டு லட்சம் பேசி முடிவு செய்து அரை கிலோ தங்கக் கட்டியை கவிதாவிடம் லட்சுமி கொடுத்துள்ளார். பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு அதனைப் பரிசோதனை செய்த போது, அது தங்கம் முலாம் பூசப்பட்ட போலி தங்கக்கட்டி என தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, லட்சுமியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் தலைமறைவாகி உள்ளார். இந்த நிலையில் இன்று காரமடையில் அதே பாணியில் தங்க கட்டிகளை வைத்து மற்றொருவரிடம் லட்சுமி பேரம் பேசியதாக தோழிகள் மூலம் தகவல் கிடைக்கப் பெற்று காரமடை வந்த கவிதா, லட்சுமியை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
பின்னர் கைதான லட்சுமியிடம் விசாரித்ததில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தொடர்ந்து இதுபோன்று பெண்களிடம் பழகி அவர்களை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலி தங்க கட்டிகளை வைத்து ஏமாற்றிய பெண்ணை கைது செய்த பெரியநாயக்கண்பாளையம் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.