தமிழக - கேரள எல்லையில் சுட்டு கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் சீனிவாசன் உடல் 28 நாட்களுக்கு பிறகு தகனம்

கோவை: தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 28 நாட்களுக்கு முன்பு தண்டர்போல்ட் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் சீனிவாசனின் உடல் கோவையில் உள்ள எரியூட்டு மையத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

கோவை: தமிழக - கேரள எல்லைப் பகுதியில் கடந்த 28 நாட்களுக்கு முன்பு தண்டர்போல்ட் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் சீனிவாசனின் உடல் கோவையில் உள்ள எரியூட்டு மையத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.

தமிழக - கேரள எல்லையில் உள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த அக்டோபர் 28 மற்றும் 29ம் தேதிகளில் தண்டர்போல்ட் சிறப்பு அதிரடி படையினருக்கும், மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களது உடல் திருச்சூர் அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 13ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கோவையில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னை நந்தனைச் சேர்ந்த மாவோயிஸ்ட் சீனிவாசன் என்பவரது உடல் அவரது சகோதரரான ராஜகோபால் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 



இதனையடுத்து, 28 நாட்களுக்குப் பிறகு கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள எரியூட்டு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...