அமைச்சர் எஸ் பி வேலுமணி, கோவையை சேர்ந்த பெண் குறித்து அவதூறாக பரப்பிய விவகாரம்; திமுக உறுப்பினர் கைது

கோவை: அமைச்சர் எஸ்.பி வேலுமணியையும் கோவையை சேர்ந்த பெண்ணையும் அவதூறாக இணைய செய்தி நிறுவனம் போல், செய்தி தயாரித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுந்த புகாரையடுத்து ஈரோட்டைச் சேர்ந்த திமுக உறுப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: அமைச்சர் எஸ்.பி வேலுமணியையும் கோவையை சேர்ந்த பெண்ணையும் அவதூறாக இணைய செய்தி நிறுவனம் போல், செய்தி தயாரித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுந்த புகாரையடுத்து ஈரோட்டைச் சேர்ந்த திமுக உறுப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து தமிழ்ச் செய்தி என்ற இணைய வடிவத்தில் செய்தி வெளியாகியிருந்தது. மேலும் இந்த செய்தியில் "ஷாக் அடிக்குது சோனா... நடந்து போனா... அம்பலமாகும் அமைச்சரின் அந்தப்புரம் அந்தரங்கம் அதிர்ச்சியில் கோவை அதிமுகவினர்" என பல அவதூறான வார்த்தைகள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், தமிழ் செய்தி பத்திரிகையின் மாவட்ட செய்தியாளர் பாலகணேசன் கொடுத்த புகாரின் பேரிலும், சோனாலி பிரதீப் கொடுத்த புகாரின் பேரிலும் கோவை மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், இரு புகாரின் பேரில் அவதூறு பரப்பியதாக ஈரோடு மாவட்டம் 20வது வார்டு திமுக உறுப்பினர் ரகுபதி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர் .அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...