அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி ஆட்சியரிடம் மார்க்., கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

திருப்பூர்: தமிழக அரசு அரசாணை எண் 318ன் படி, 5 ஆண்டுகளுக்கு மேலான அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.

திருப்பூர்: தமிழக அரசு அரசாணை எண் 318ன் படி, 5 ஆண்டுகளுக்கு மேலான அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 5 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை வீடு கட்டி மின் இணைப்பு பெற்று ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீண்ட காலமாக பட்டா வேண்டி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்துள்ளனர் ஆனால் இதுவரை அந்த மனுக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இந்நிலையில், தமிழக அரசு ஆணை எண் 318ன் ப,டி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்குப் பட்டா வழங்க வேண்டும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், மேலும் பணம் கொடுத்து நிலம் வாங்கி கிரையம் செய்து வீடு கட்டி வசிக்கும் பொதுமக்களை தமிழக அரசு அப்புறப்படுத்த முயற்சி செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ தங்கவேல் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...