திருப்பூரில் ரூ.3 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக ஓய்வுபெற்ற தபால் ஊழியர் மீது புகார்; போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் அருகே பூமலூரில் வாடிக்கையாளர்களின் மூன்று லட்ச ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக ஓய்வுபெற்ற தபால் ஊழியர் மீது அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே பூமலூரில் வாடிக்கையாளர்களின் மூன்று லட்ச ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக ஓய்வுபெற்ற தபால் ஊழியர் மீது அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் விவசாயிகள், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூமலூரில் உள்ள மத்திய அரசின் தபால் நிலையத்தில் தங்களது வரவு செலவு கணக்கு வைத்துள்ளனர்.

இந்த தபால் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பாலன்(60) என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக தபால் நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பணி ஓய்வு பெற்றுள்ளார். இருந்த போதிலும் அவர் தொடர்ந்து, அதே தபால் நிலையத்தில் தபால் மற்றும் பணப் பட்டுவாடா மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், கூலித் தொழிலாளர்கள், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் என தபால் நிலைய சேமிப்பு கணக்கில் வைத்திருந்த சுமார் இரண்டே முக்கால் லட்சம் ரூபாயை ஓய்வு பெற்ற தபால் ஊழியர் பாலன் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.



இதையடுத்து பணத்தை பறிகொடுத்த பலரும் இன்று பூமலூர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, அங்கிருந்த அலுவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீசாரிடம் பணத்தை இழந்த பொது மக்கள், உடனடியாக இழந்த பணத்தை மீட்டு தரவேண்டும் என்றும் கையாடல் செய்த பாலன் மீது கடும் நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்றும் அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். இதனிடையே, தலைமறைவாக உள்ள பாலனை மங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...