கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு போலீசாருடன் வாக்குவாதம்; விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். மனு நீதி நாளன்று பாதுகாப்பு காரணம் கருதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டு முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கோவை வேடபட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, அவரை போலீசார் தர்ணா செய்ய இங்கு அனுமதி இல்லை என எச்சரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெகநாதன் அங்கிருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து அவரை அங்கிருந்த போலீசார், வாகனத்தில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர் வைத்திருந்த மனுவில் 15 ஆடுகள் வைத்து பிழைப்பு நடத்தி வந்ததாகவும், அதில் மூன்று ஆடுகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக வடவள்ளி மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், தனது ஆடுகளை விரோதம் காரணமாக மூன்று பேர் கொன்று இருக்கலாம் என சந்தேகப்படுவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்பதற்காக மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...