கோவை: முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வந்த போது பேருந்தில் பணத்தை திருடர்கள் ஜேப்படி செய்ததால் கண்ணீர் மல்க மூதாட்டி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க வந்த போது பேருந்தில் பணத்தை திருடர்கள் ஜேப்படி செய்ததால் கண்ணீர் மல்க மூதாட்டி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சொர்னகணி(86). இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விடவே, இன்று காலை 9 மணி அளவில் முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அரசு பேருந்து 15K என்ற பேருந்தில் வந்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு எழுதி கொடுத்தவர், அதற்கு உண்டான பணத்தை கொடுக்க பையை பார்த்த போது, தான் கொண்டு வந்த பையில் வைத்திருந்த ரூ.3900 பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து அழத் தொடங்கினார்.
இதனைக்கண்ட அங்கிருந்த காவலர்கள் மற்றும் மனு நீதி முகாம் பணியில் இருந்த பத்திரிகையாளர் அவரிடம் விசாரித்ததில், தனது பணத்தை பேருந்தில் வரும் போது யாரோ திருடி விட்டதாகவும், தனது சொந்த செலவிற்கு சிறிது சிறிதாக சேர்த்த பணம் எனவும் பணம் தொலைந்து குறித்து தனது மகன்களுக்கு தெரிந்தால் தன்னை திட்டுவார்கள் என பரிதாபமாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த நிருபர்களில் ஒருவர் புகார் மனு எழுதி கொடுத்தார். பின்னர் அதனை பெற்று கொண்ட அவர், பந்தய சாலை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். பணத்தை பறிகொடுத்த மூதாட்டி கண்ணீர் மல்க அழுதது அங்கிருந்தவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
கோவை பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சொர்னகணி(86). இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விடவே, இன்று காலை 9 மணி அளவில் முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அரசு பேருந்து 15K என்ற பேருந்தில் வந்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு எழுதி கொடுத்தவர், அதற்கு உண்டான பணத்தை கொடுக்க பையை பார்த்த போது, தான் கொண்டு வந்த பையில் வைத்திருந்த ரூ.3900 பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து அழத் தொடங்கினார்.
இதனைக்கண்ட அங்கிருந்த காவலர்கள் மற்றும் மனு நீதி முகாம் பணியில் இருந்த பத்திரிகையாளர் அவரிடம் விசாரித்ததில், தனது பணத்தை பேருந்தில் வரும் போது யாரோ திருடி விட்டதாகவும், தனது சொந்த செலவிற்கு சிறிது சிறிதாக சேர்த்த பணம் எனவும் பணம் தொலைந்து குறித்து தனது மகன்களுக்கு தெரிந்தால் தன்னை திட்டுவார்கள் என பரிதாபமாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த நிருபர்களில் ஒருவர் புகார் மனு எழுதி கொடுத்தார். பின்னர் அதனை பெற்று கொண்ட அவர், பந்தய சாலை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றார். பணத்தை பறிகொடுத்த மூதாட்டி கண்ணீர் மல்க அழுதது அங்கிருந்தவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.