தமிழக முதலமைச்சர் பதவிக்கு தகுதியில்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி - டிராபிக் ராமசாமி குற்றச்சாட்டு

கோவை: உயர் நீதிமன்ற ஆணை கூட தெரியாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அப்பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லை என்று டிராபிக் ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை: உயர் நீதிமன்ற ஆணை கூட தெரியாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அப்பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லை என்று டிராபிக் ராமசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை ரயில் நிலையத்தில் வாகன நிறுத்ததில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரின் பேரில், டிராபிக் ராமசாமி இன்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, வாகனம் நிறுத்தும் இடத்தில் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்வதாக குற்றம் சாட்டிய அவர், ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வாகனங்களை இலவசமாக பாதுகாக்க வேண்டும், அதைவிடுத்து அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதை கண்டிக்கத்தக்கது என்றும் அரசாணையை ரத்து செய்ய சொல்லி நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக தெரிவித்தார்.

ரயில்நிலையத்தின் முன் பகுதியிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் ஆனால் ரயில் நிலையத்தின் பின்புறமுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இரு சக்கர வாகனத்திற்கு 10 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாயும், காருக்கு 50 ரூபாய்க்கு 100 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் 20 ரூபாய் மற்றும் 100 ரூபாய் ரசீது மட்டுமே இருப்பது எப்படி கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, கொடிக்கம்பம் வைப்பதற்கு காவல்துறையிடம் அனுமதி வாங்கி இருப்பதாகவும், உயர்நீதிமன்றம் பேனருக்கு மட்டும்தான் தடை விதித்திருப்பதாக முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், உயர் நீதிமன்ற ஆணை கூட தெரியாதவர் முதலமைச்சராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும் கோவையில் கொடிக்கம்பம் விழுந்து அடிபட்ட வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வருகின்ற 6ம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாக கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...