மேட்டுப்பாளையத்தில் 6 அடி உயரம் கொண்ட அதிசய மயில் மீன்; பார்க்க குவிந்த அசைவ பிரியர்கள்

கோவை: தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு விற்பனைக்கு வந்த ஆறு அடி உயரம் கொண்ட மயில் மீனை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

கோவை: தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு விற்பனைக்கு வந்த ஆறு அடி உயரம் கொண்ட மயில் மீனை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மீனாட்சி பேருந்து நிறுத்தம் அருகே மீன் கடை நடத்தி வருபவர் வெங்கடேஷ், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக மீன் வியாபாரம் செய்து வரும் நிலையில், இவர் மீன்களை தூத்துக்குடி பகுதியில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறார். 

இந்த நிலையில், மீன்களை ஆர்டர் செய்து காத்திருந்த வெங்கடேஷ்க்கு இன்று தூத்துக்குடியில் இருந்து மீன் இறக்கப்பட்ட போது, அதில் ஆள் உயரமுள்ள சுமார் ஆறு அடி உயரம் கொண்ட கூர்மையான மூக்கு கொண்ட மயில் என்ற வகை மீன் இருந்தது, அதன் எடையைப் பார்த்த போது இருபது கிலோ இருந்தது. 

இதுவரை அதுபோன்ற உயரமான மீன்களை பார்த்திராத அசைவ பிரியர்கள் வெங்கடடேஷ் கடைக்கு வந்து மயில் மீனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்று வருகின்றனர். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...