மேட்டுப்பாளையத்தில் மழைநீர் தடுப்பணையில் மூழ்கி அடையாளம் தெரியாத 15 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மழை நீர் தடுப்பணையில் மூழ்கி 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே மழை நீர் தடுப்பணையில் மூழ்கி 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட கிழக்கு பருவமழை காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் புது காய்கறி மண்டி அருகே உள்ள தடுப்பணையில், தற்போது தண்ணீர் முழுவதும் நிரம்பி குட்டை போல காட்சி அளிக்கிறது. இதில் மீன்கள் அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அந்த குட்டையில் குளிப்பதற்காகவும் மீன் பிடிப்பதற்காகவும் இறங்கிய 15 வயது சிறுவன் தண்ணீரில் இருந்த சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான். அடையாளம் தெரியாத அச்சிறுவன் தண்ணீரில் மூழ்குவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் தீயனைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், உயிரிழந்த அச்சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சிறுவன் யார் எந்த பகுதியினை சேர்ந்தவன் என எந்த விபரமும் இதுவரை தெரியாத நிலையில் சிறுவனின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிறுமுகை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...