கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மருத்துவனை, மேட்டுப்பாளையம் நகர பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் சாமன்ன வாட்டர் ஹவுஸ் போன்ற பகுதியில் இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மருத்துவனை, மேட்டுப்பாளையம் நகர பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் சாமன்ன வாட்டர் ஹவுஸ் போன்ற பகுதியில் இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதிய கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என ஆட்சியரிடம் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அப்பள்ளிக்கு நேரில் வந்த கோவை ஆட்சியர் அங்குள்ள நிலவரம் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் விசாரனை நடத்தினார்.

மேலும், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போதிய கட்டிட வசதிகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியர் உடனடியாக இதற்கு தீர்வு காண ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கழிப்பறை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தி தர நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு திடீரென சென்ற ஆட்சியர் அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவு,.டெங்கு காய்ச்சல்
பிரிவு போன்றவற்றை ஆய்வு செய்ததுடன் மருந்துகள் இருப்பு மற் நோயாளிகளின் வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், மேட்டுப்பாளையம் நகருக்கு பொதுமக்களுக்கு குடிநீர் எடுக்கும் சாமன்ன வாட்டர் ஹவுஸ் பகுதிக்கு நேரில் சென்று அங்கு தண்ணீரின் சுத்தகரிப்பு மற்றும் தரம் குறித்து பாட்டில்களில் குடிநீரை பிடித்து
கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், நகர பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம் காரணமாக முக்கிய சாலைகளில் தோண்டபட்டுள்ள குழிகள் மூடப்படாமல் உள்ளதால் சாலைகளில் விபத்துகள் அதிகரித்துள்ளது குறித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் ஏராளமானோர் குறை கூறினார்கள். அது குறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ராசாமணி பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் மற்றும் நகராட்சி ஆணையாளர் உட்பட முக்கிய அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதிய கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என ஆட்சியரிடம் கடந்த வாரம் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அப்பள்ளிக்கு நேரில் வந்த கோவை ஆட்சியர் அங்குள்ள நிலவரம் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் விசாரனை நடத்தினார்.

மேலும், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போதிய கட்டிட வசதிகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியர் உடனடியாக இதற்கு தீர்வு காண ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கழிப்பறை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தி தர நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு திடீரென சென்ற ஆட்சியர் அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவு,.டெங்கு காய்ச்சல்
பிரிவு போன்றவற்றை ஆய்வு செய்ததுடன் மருந்துகள் இருப்பு மற் நோயாளிகளின் வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், மேட்டுப்பாளையம் நகருக்கு பொதுமக்களுக்கு குடிநீர் எடுக்கும் சாமன்ன வாட்டர் ஹவுஸ் பகுதிக்கு நேரில் சென்று அங்கு தண்ணீரின் சுத்தகரிப்பு மற்றும் தரம் குறித்து பாட்டில்களில் குடிநீரை பிடித்து
கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், நகர பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம் காரணமாக முக்கிய சாலைகளில் தோண்டபட்டுள்ள குழிகள் மூடப்படாமல் உள்ளதால் சாலைகளில் விபத்துகள் அதிகரித்துள்ளது குறித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் ஏராளமானோர் குறை கூறினார்கள். அது குறித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ராசாமணி பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் மற்றும் நகராட்சி ஆணையாளர் உட்பட முக்கிய அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.