மாவோயிஸ்ட் டேனிஷை  டிசம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

மாவோயிஸ்ட் டேனிஷை  டிசம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

நீலகிரி

2016 ஆம் ஆண்டு குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அரசுக்கு எதிராக பழங்குடியின மக்களை மூளைச்சலவை செய்ததாக கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் டேனிஷ் பலத்த பாதுகாப்புடன் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு ஆஜர். டிசம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், கேரளா மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதிகளில் அவ்வபோது மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதால் எல்லையோரப் பகுதிகளில் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு குன்னுரை அடுத்த கொலக்கம்பை, மூப்பர் காடு போன்ற பகுதிகளில் உள்ள பழங்குடியினர் கிராமத்தில் 5க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் புகுந்து, பழங்குடியினர் மக்களிடையே அரசுக்கு எதிராக மூளைச்சலவை செய்து, அரசுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கில் மாவோயிஸ்ட் டேனிஷ் என்ற இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில் இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை முன்பு பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை டிசம்பர் 20ஆம் தேதி வரை மாவோயிஸ்ட் டேனிஷ்யை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட டேனிஷ் கேரளாவில் அரசுக்கு எதிரான பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் டேனிஷ் கோஷம் எழுப்பியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...