மாவோயிஸ்ட் தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
கோவை: கோவையில் தமிழ்நாடு சிறப்பு அதிரடி விரைவு படையினரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் துப்பாக்கியுடன் மாவோயிஸ்ட்டுகள் சுற்றி வருவதாக உளவுத்துறை மூலம் சிறப்பு அதிரடிப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை எஸ்பி மூர்த்தி தலைமையில் மூன்று குழுவாக தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு சிறப்பு அதிரடி விரைவு படையினர் கோவை மாவட்டத்தில் உள்ள சேம்புகரைக்கு அருகே உள்ள மூலக்கண்கள் பகுதியில் மாவோயிஸ்ட் தீபக்கை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
மேலும், தீபக்கை போலீசார் கைது செய்யும் பொழுது காயங்கள் ஏற்பட்டதால், அவருக்கு வீரபாண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை சிறைவாசிகள் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். இந்த நிலையில், மாவோயிஸ்ட் தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி மணி பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் இராசாமணி ஒப்புதலின்படி வழக்கு பதிவு செய்து மாவோயிஸ்ட் தீபக் கோவை மத்திய சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக - கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் துப்பாக்கியுடன் மாவோயிஸ்ட்டுகள் சுற்றி வருவதாக உளவுத்துறை மூலம் சிறப்பு அதிரடிப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை எஸ்பி மூர்த்தி தலைமையில் மூன்று குழுவாக தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையில், கடந்த 9ம் தேதி தமிழ்நாடு சிறப்பு அதிரடி விரைவு படையினர் கோவை மாவட்டத்தில் உள்ள சேம்புகரைக்கு அருகே உள்ள மூலக்கண்கள் பகுதியில் மாவோயிஸ்ட் தீபக்கை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
மேலும், தீபக்கை போலீசார் கைது செய்யும் பொழுது காயங்கள் ஏற்பட்டதால், அவருக்கு வீரபாண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை சிறைவாசிகள் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர். இந்த நிலையில், மாவோயிஸ்ட் தீபக் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி மணி பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் இராசாமணி ஒப்புதலின்படி வழக்கு பதிவு செய்து மாவோயிஸ்ட் தீபக் கோவை மத்திய சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.