திருப்பூர்: திருப்பூரில் கொங்கணகிரி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்களுடன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
திருப்பூர்: திருப்பூரில் கொங்கணகிரி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்களுடன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையால், பொதுமக்களுக்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியருக்கும் இடையூறாக இருப்பதால் அக்கடையை அகற்ற வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
பகல் 12 மணியில் இருந்து இரவு வரையில் ஏராளமானவர்கள் வந்து மது குடித்துவிட்டுச் செல்லும் போது மாணவிகளை கிண்டல், கேலிகள் செய்வது அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இந்நிலையில், மாணவ, மாணவியருக்கு இடையூறாக உள்ள கடையை அகற்ற கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனுடன் வந்து புகார் மனு அளித்த பொதுமக்கள், இதன் பிறகும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக கூறினர்.

திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையால், பொதுமக்களுக்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியருக்கும் இடையூறாக இருப்பதால் அக்கடையை அகற்ற வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
பகல் 12 மணியில் இருந்து இரவு வரையில் ஏராளமானவர்கள் வந்து மது குடித்துவிட்டுச் செல்லும் போது மாணவிகளை கிண்டல், கேலிகள் செய்வது அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இந்நிலையில், மாணவ, மாணவியருக்கு இடையூறாக உள்ள கடையை அகற்ற கோரி பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனுடன் வந்து புகார் மனு அளித்த பொதுமக்கள், இதன் பிறகும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக கூறினர்.