கோவை: மேட்டுப்பாளையத்தில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தேவையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜியன். இவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் ஆட்டு பட்டியினை அமைத்து அதில் 100க்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது ஆட்டுப் பட்டியில் உள்ள ஒரு செம்மறி ஆடு கருவுற்று இருந்த நிலையில் நேற்று இரவு ஆறு கால்களுடன் கூடிய அதிசய ஆட்டு குட்டியினை ஈன்றது. இதனையடுத்து ஆறு கால்களுடன் கூடிய ஆட்டுக்குட்டி பிறந்துள்ள அதிசயத்தை அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
பொதுவாக மனிதர்களுக்கு உள்ளது போலவே கால்நடைகளுக்கும் ஹார்மோன் குறைபாடு காரணமாக இதுபோன்று கூடுதல் கால்கள் மற்றும் தலைகள் உருவாக காரணம் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இந்த கால்கள் ஆடுகளுடன் சேர்ந்து வளர வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தேவையாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜியன். இவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் ஆட்டு பட்டியினை அமைத்து அதில் 100க்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது ஆட்டுப் பட்டியில் உள்ள ஒரு செம்மறி ஆடு கருவுற்று இருந்த நிலையில் நேற்று இரவு ஆறு கால்களுடன் கூடிய அதிசய ஆட்டு குட்டியினை ஈன்றது. இதனையடுத்து ஆறு கால்களுடன் கூடிய ஆட்டுக்குட்டி பிறந்துள்ள அதிசயத்தை அப்பகுதி கிராம மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
பொதுவாக மனிதர்களுக்கு உள்ளது போலவே கால்நடைகளுக்கும் ஹார்மோன் குறைபாடு காரணமாக இதுபோன்று கூடுதல் கால்கள் மற்றும் தலைகள் உருவாக காரணம் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் இந்த கால்கள் ஆடுகளுடன் சேர்ந்து வளர வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தனர்.