கோவை: அரசு நலத்திட்ட விழாவில் வேண்டுமென்றே தன்னை புறக்கணித்து உள்ளதாக கூறி சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: அரசு நலத்திட்ட விழாவில் வேண்டுமென்றே தன்னை புறக்கணித்து உள்ளதாக கூறி சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் தமிழக அரசின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா அரசு சார்பில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஊரக வளர்ச்சி,நகராட்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்க இருந்தார்.
அப்போது, அத்தொகுதியின் திமுக எம்.எல்.ஏ நா.கார்த்திக் அரசு சார்பில் நடக்கும் விழாவில் தனக்கு அழைப்பில்லாத போதும் கலந்து கொள்ள வந்துள்ளார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர், விழாவில் கலந்துகொள்ள தங்களுக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தனது தொகுதிக்குள் நடக்கும் அரசு நலத்திட்ட விழாவில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டுள்ளார் என்பதற்காக அரசு அதிகாரிகள்,தனக்கு அழைப்பு விடுக்காமல், நடத்துவது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும், அதிமுகவின் சொந்த விழா என்றால் ஏன் அரசு நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என காவல் துறையினருடன், திமுக எம் எல் ஏ கார்த்திக் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர் தனது கட்சி உறுப்பினர்களுடன் விழா நடைபெறும் இடத்தில் இருந்து கிளம்பிச் சென்றார்.