மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி - நீலகிரி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

நீலகிரி: மதுபானங்கள் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உதகை இரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நீலகிரி: மதுபானங்கள் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உதகை இரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.



நீலகிரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை நடத்திய இந்த மதுவிலக்கு பேரணியில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இந்த பேரணியை துவக்கி வைத்த பின் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்கள், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.



ரயில் நிலையத்திலிருந்து தாவரவியல் பூங்கா செல்லும் பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி கலந்துகொண்டனர். பேரணியானது ரயில்நிலையத்தில் துவங்கி பிரதான சாலையில் வழியே பழங்குடியினர் பண்பாட்டு மையத்தை அடைந்தது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...