அனுமதியின்றி செயல்படும் வாரச்‌ சந்தைகளுக்கு தடைவிதிக்க கோரி மனு

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்‌ தனியாருக்கு சொந்தமான இடங்களில்‌ முறையான அனுமதியின்றி செயல்படும் வாரச்‌ சந்தைகளுக்கு தடைவிதிக்க கோரி சுதேசி வணிகர்கள் பாதுகாப்பு நலசங்கத்தினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்‌ தனியாருக்கு சொந்தமான இடங்களில்‌ முறையான அனுமதியின்றி செயல்படும் வாரச்‌ சந்தைகளுக்கு தடைவிதிக்க கோரி சுதேசி வணிகர்கள் பாதுகாப்பு நலசங்கத்தினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:-

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்‌ மளிகைக்கடை மற்றும்‌ காய்‌ கனி கடை வைத்து வியாபாரம்‌ செய்வதற்கு மாநகராட்சி உரிமம்‌ (டி அண்டு ஓ டிரேடர்ஸ்‌ உரிமம்‌) தொழில்‌ வரி, விவசாய வேளாண்மை விற்பனை குழு மூலம்‌ காய்கறி விற்க உரிமம்‌, எடைக்கல்‌ முத்திரை உரிமம்‌, உணவு கலப்பட சட்டம் (ESSAI)உரிமம்‌, குப்பைவரி உரிமம்‌, GST, தீயணைப்பு சேலை உரிமம்‌ (Fire Service) போன்ற உரிமங்களுடன்‌ கடை வாடகை, மின்சார கட்டணம்‌ ஆகியவை தரும்‌ கூடுதல்‌ சுமையாக சேர்த்து சிறு வணிகம்‌ செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இதில் எந்த ஒரு உரிமம்‌ இல்லாமல்‌ தொழில்‌ செய்தாலும்‌ சம்பந்தப்பட்ட துறையினர்‌ ஆய்வு மேற்கொண்டு அபராதம்‌ விதித்தோ, சட்ட நடவடிக்கைகள்‌ மேற்கொண்டோ அரசின்‌ விதிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்‌.

இந்நிலையில், எந்த ஒரு உரிமமும்‌ எடுக்காமல்‌ தனியார்‌ இடங்களில்‌ ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தைகள்‌ அமைத்து தனிநபர் லாபமடைவதோடு, அரசு விதிகளை பின்பற்றாமல் வரிஏய்ப்பு செய்வதாக குற்றம் சாட்டிய அவர்கள், வாரச்சந்தைகளால் சிறு வணிகர்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறினார்.

மேலும், முறையான அனுமதியின்றி இயங்கும் இந்த வார சந்தைகளில் உள்ள கழிவுகளை எந்த உரிமத்தின் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்கின்றனர் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், உரிய அனுமதியின்றி செயல்படும் வாரச்‌ சந்தைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...