கோவை: முறையான கமிஷன் மற்றும் போனஸ் தராமல் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஓலா நிறுவனத்தின் முன் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக ஓட்டுநர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதையடுத்து தீக்குளிக்க வந்த நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: முறையான கமிஷன் மற்றும் போனஸ் தராமல் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஓலா நிறுவனத்தின் முன் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக ஓட்டுநர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதையடுத்து தீக்குளிக்க வந்த நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓலா கேப்ஸ் என்பது போக்குவரத்து வலை நிறுவனமாகும். இந்நிறுவனம் முதன்முதலில் தொலைத் தொடர்பு மூலமாக மும்பையில் வாடிக்கையாளர்களுக்குச் சேவையை வழங்கியது. இது படிப்படியாக உயர்ந்து இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் வாடகை கார் உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் போட்டு, கமிஷன் அடிப்படையில் பணம் கொடுத்து வருகின்றனர்.
இதில் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கார்கள் ஓலா நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். ஓலா நிறுவனம் கமிஷன் மற்றும் போனஸ் தொகையை ஆண்டுதோறும் முறையாக வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஒழுங்காக கமிஷன் மற்றும் போனஸ் தொகையை வழங்காமல் ஓலா ஒட்டுநர்களை ஏமாற்றி வருவதாக பல்வேறு புகார்களை மாவட்ட ஆட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பணியாளர்கள் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அதிகாரிகளும் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டுபவருக்கு உரிய தொகை வழங்க அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அரசு அதிகாரிகள் உத்தரவிட்டும் ஓலா நிறுவனம் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய தொகையை முறையாக வழங்கவில்லை.
இந்த நிலையில், ஓலா நிறுவனத்தால் பாதிக்கப்பட்டுள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவர் இன்று ஓலா நிறுவனத்தின் முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனையடுத்து, ஆர் எஸ் புரம் ஓலா நிறுவனம் அலுவலகம் அருகே தயார் நிலையில் இருந்த போலீசார் தீக்குளிக்க வருவதாக வீடியோ எடுத்து வெளியிட்ட நபரை பிடித்தனர்.
அப்போது, இன்றைக்கு தன்னை போலீசார் காப்பாற்றி விட்டதாகவும், நாளைக்கு நிறைய ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்ய முயலும் போது ஒன்றும் செய்ய முடியாது. ஓலா நிறுவனத்திடம் இருந்து உரிய கமிஷன் மற்றும் போனஸை வாங்கி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரால் பிடிபட்ட பிரசாத் கோஷங்களை எழுப்பினர்.