திருப்பூரில் குப்பைக்கிடங்கால் பரவும் தொற்றுநோய்..! சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் மாநகராட்சியின் குப்பைக்கிடங்கால் சுகாதார சீர்கேடு நிலவி தொற்றுநோய் பரவுவதாகக் கூறி பொதுமக்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .


திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் மாநகராட்சியின் குப்பைக்கிடங்கால் சுகாதார சீர்கேடு நிலவி தொற்றுநோய் பரவுவதாகக் கூறி பொதுமக்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு பகுதியில் மும்மூர்த்தி நகர், கருப்பராயன் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்புக்கு மத்தியில் மாநகராட்சி சார்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குப்பை கிடங்கு நிரந்தரமாக அந்த இடத்திலேயே அமைக்கப்பட்டுவிட்டதாகவும் அதனால் சுற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதால் குப்பைக்கிடங்கினை இடமாற்றக்கோரி பலமுறை மாநகராட்சியிடம் வலியுறுத்தியுள்ளனர்.



ஆனால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பலனில்லாததால், வடக்கு வட்டாட்சியரை வரவழைத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...