கோவை: உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து மாநகராட்சியின் கீழ் வரும் 369 கழிப்பறைகளின் தரம் குறித்த சோதனை தொடங்கியுள்ளது.
கோவை: உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து மாநகராட்சியின் கீழ் வரும் 369 கழிப்பறைகளின் தரம் குறித்த சோதனை தொடங்கியுள்ளது.
இந்த துறையில் பணிபுரியும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான 'தூய்மை கழிப்பறை' அமைப்பால் இந்த தர சோதனை நடத்தப்படுகிறது. கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் www.cleantoilet.org என்ற வலைத்தளம் இதனை தொடங்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பேசுகையில், “கோவை மாநகராட்சியின் கீழ் வரும் 369 கழிப்பறைகள் அனைத்தையும் தர சோதனை செய்ய ரோட்டரி கிளப்புடன் இணைந்து கோவை மாநகராட்சி இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளதாக கூறினார்.
கோவையில் பொது கழிப்பறைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், கழிப்பறைகளின் தற்போதைய நிலை குறித்து அறிய மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வின் முடிவில் கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு, குடிமை அமைப்பின் மூலம் கழிப்பறைகள் சுகாதாரமாக வைக்க முடியும் என்றார்.
அனைத்து கழிப்பறைகளிலும் சானிட்டரி நாப்கின்கள், எரியூட்டிகள் போன்றவற்றிற்கான விற்பனை இயந்திரங்கள் உள்ளிட்ட சிறந்த வசதிகள் இருப்பதில்லை என்று கூறிய அவர், அனைத்து கழிப்பறைகளும் ஒழுங்காக பராமரிக்கப்பட வேண்டும் என்பதே கோவை மாநராட்சியின் நோக்கம் என்றும் தூய்மை இந்தியா அமைப்பானது பள்ளி குழந்தைகளுக்கு துப்புரவு மற்றும் தூய்மையான கழிப்பறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறினார்.
இந்த துறையில் பணிபுரியும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான 'தூய்மை கழிப்பறை' அமைப்பால் இந்த தர சோதனை நடத்தப்படுகிறது. கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் www.cleantoilet.org என்ற வலைத்தளம் இதனை தொடங்கி வைத்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பேசுகையில், “கோவை மாநகராட்சியின் கீழ் வரும் 369 கழிப்பறைகள் அனைத்தையும் தர சோதனை செய்ய ரோட்டரி கிளப்புடன் இணைந்து கோவை மாநகராட்சி இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளதாக கூறினார்.
கோவையில் பொது கழிப்பறைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், கழிப்பறைகளின் தற்போதைய நிலை குறித்து அறிய மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வின் முடிவில் கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டு, குடிமை அமைப்பின் மூலம் கழிப்பறைகள் சுகாதாரமாக வைக்க முடியும் என்றார்.
அனைத்து கழிப்பறைகளிலும் சானிட்டரி நாப்கின்கள், எரியூட்டிகள் போன்றவற்றிற்கான விற்பனை இயந்திரங்கள் உள்ளிட்ட சிறந்த வசதிகள் இருப்பதில்லை என்று கூறிய அவர், அனைத்து கழிப்பறைகளும் ஒழுங்காக பராமரிக்கப்பட வேண்டும் என்பதே கோவை மாநராட்சியின் நோக்கம் என்றும் தூய்மை இந்தியா அமைப்பானது பள்ளி குழந்தைகளுக்கு துப்புரவு மற்றும் தூய்மையான கழிப்பறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறினார்.