நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், இயல்பு நிலை திரும்பும் வரை சாலைகளில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், இயல்பு நிலை திரும்பும் வரை சாலைகளில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குன்னூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த கன மழையின் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 11 இடங்களில் மிகப்பெரிய மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்தன. இவை உடனுக்குடன் சீரமைக்கப்பட்டாலும் இரவு நேரத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக அவ்வப்போது சிறிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, மஞ்சூர் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு வருவதால், இதனை பாெக்லைன், இட்டாச்சி, கம்ரசர், டிப்பர் லாரிகள் பயன்படுத்தி அகற்றப்பட்டு வருகிறது.
மேலும், இயல்பு நிலை திரும்பும் வரை இந்த சாலைகளில் தாெடர்நது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.