கோவை: சிறைவாசிகள் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாவோயிஸ்ட் தீபக்கை மனித உரிமை வழக்கறிஞர் குழுவினர் நேரில் சந்திக்க நீதிமன்ற உத்தரவு இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை: சிறைவாசிகள் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் மாவோயிஸ்ட் தீபக்கை மனித உரிமை வழக்கறிஞர் குழுவினர் நேரில் சந்திக்க நீதிமன்ற உத்தரவு இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை வழக்கறிஞர்கள் இன்று நேரில் சந்திக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து வழக்கறிஞர் குழுவினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். ஆனால் உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் பொன்முடி செல்வன் அனுமதி மறுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து மனித உரிமை வழக்கறிஞர் குழுவினர், நீதிமன்ற அனுமதி உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றனர். பின்னர், சிறைவாசிகள் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை மனித உரிமை வழக்கறிஞர்கள் சந்திக்க காவல்துறையிடம் நீதிமன்ற உத்தரவு நகலை காண்பித்துள்ளனர். ஆனால் காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கறிஞர் குழுவினர் மீண்டும் நீதிமன்றத்திற்கு விரைந்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை வழக்கறிஞர்கள் இன்று நேரில் சந்திக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து வழக்கறிஞர் குழுவினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி கோரினர். ஆனால் உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் பொன்முடி செல்வன் அனுமதி மறுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து மனித உரிமை வழக்கறிஞர் குழுவினர், நீதிமன்ற அனுமதி உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றனர். பின்னர், சிறைவாசிகள் சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை மனித உரிமை வழக்கறிஞர்கள் சந்திக்க காவல்துறையிடம் நீதிமன்ற உத்தரவு நகலை காண்பித்துள்ளனர். ஆனால் காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கறிஞர் குழுவினர் மீண்டும் நீதிமன்றத்திற்கு விரைந்தனர்.