கோவை: சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க தவறிய காரணத்தால் ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க தவறிய காரணத்தால் ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014ம் ஆண்டு கோவை வடவள்ளியை சேர்ந்த அன்பழகன் என்பவர் ஆவின் பால் பெறுவதற்கு வாடிக்கையாளர் அட்டையை பணம் கொடுத்து வாங்கி இருந்த போதும் அவரது பெயர் ஆவின் சாவடியில் இல்லாததால் சேவை குறைபாடு என கூறி கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் 2019 ஜூலை 17 அன்பழகனுக்கு ரூ.5000 நிவாரண தொகையும் ரூ.3000 வழக்கு செலவுக்கான தொகையை வழங்கிட உத்தரவிடப்பட்ட நிலையில் இதுவரை ஆவின் நிர்வாகம் தீர்ப்பின்படி அன்பழகனுக்கு நஷ்ட ஈடு வழங்காததால், நுகர்வோர் நீதிமன்றம் ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
2014ம் ஆண்டு கோவை வடவள்ளியை சேர்ந்த அன்பழகன் என்பவர் ஆவின் பால் பெறுவதற்கு வாடிக்கையாளர் அட்டையை பணம் கொடுத்து வாங்கி இருந்த போதும் அவரது பெயர் ஆவின் சாவடியில் இல்லாததால் சேவை குறைபாடு என கூறி கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் 2019 ஜூலை 17 அன்பழகனுக்கு ரூ.5000 நிவாரண தொகையும் ரூ.3000 வழக்கு செலவுக்கான தொகையை வழங்கிட உத்தரவிடப்பட்ட நிலையில் இதுவரை ஆவின் நிர்வாகம் தீர்ப்பின்படி அன்பழகனுக்கு நஷ்ட ஈடு வழங்காததால், நுகர்வோர் நீதிமன்றம் ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.