ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் புதிய கருவி; பதினொன்றாம் வகுப்பு மாணவன் அசத்தல்

கோவை: ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் புதிய கருவியை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

கோவை: ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் புதிய கருவியை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

திருச்சி மணப்பாறையில் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த சுஜீத் என்ற இரண்டு வயது சிறுவன் மீட்க முடியாமல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே கவலையடையச் செய்தது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது மீட்புப் பணிக்காக நம்மிடம் போதிய உபகரணங்கள் இல்லாததே இதுபோன்ற உயிரிழப்புக்கு காரணமாக அமைகிறது.

இதனை கண்டு மிகவும் மனவருத்தபட்ட மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சுபாஸ் சந்திரன் என்ற மாணவன், இதற்கான தீர்வை நோக்கிய தனது ஆய்வை துவக்கிய நிலையில், இன்று ஆழ்குழாய் கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் புதிய கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

மிகவும் எளிய முறையில் இதனை உருவாக்கியுள்ள மாணவன் சுபாஸ் சந்திரன், இதற்காக கடந்த ஒரு மாதகாலமாக இடைவிடாது பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தனது தந்தையின் உதவியுடன் இதனை சாதித்துள்ளார். குழந்தை ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தவுடன் மேலும் கீழே இறங்காமல் இருக்க மெல்லிய வடிவில் சுமார் 5 கிலோ எடை வரை தாங்கக் கூடிய ஒரு பைப்பை கொண்டு தாங்கி பிடிப்பதுடன் குழந்தையின் கைகளில் பாதிப்பு இல்லாத வகையில் சுறுக்கு வைத்து மேலே எடுக்க முடியும் என்பதை மாணவன் இன்று தனது பள்ளியில் சக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் செய்து காண்பித்தார்.



மேலும், அதே உபகரணத்தில் குழந்தையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபடக் கூடிய வகையில் இதனை வடிவமைத்துள்ளார். மாணவன் சுபாஸ் சந்திரனின் இந்த செயலை கண்டு சக மாணவர்களும், ஆசிரியர்களும் அவரை வெகுவாக பாராட்டினர். இன்றைய மாணவர்களே நாளைய அறிவியலாளர்கள் என்பதை உணர்ந்து உருவாக்கிய இந்த மாணவனின் கண்டுபிடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. விரைவில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் செயலாக்கம் காண்பிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...