கோவை: கால அவகாசம் வழங்காமல் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளையை உடனடியாக மூடவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அசோக் ஸ்ரீநிதி பாமக மாநில இளைஞரணி செயலாளர் தலைமையில் மனு அளித்தனர்.
கோவை: கால அவகாசம் வழங்காமல் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளையை உடனடியாக மூடவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் அசோக் ஸ்ரீநிதி பாமக மாநில இளைஞரணி செயலாளர் தலைமையில் மனு அளித்தனர்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:-
அனுமதியின்றி செயல்படும் 141 செங்கல் சூளைகளை மூட விளக்கம் கேட்டு, செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள் கால அவகாசம் கொடுத்துள்ளனர்.

கனிமம் மற்றும் சுரங்கத்துறைக்கு செங்கல் சூளைகள் சார்பாக ஆண்டுதோறும் பணம் செலுத்தி வருகின்றனர். அப்படி செலுத்தும் தொகைக்கு அவர்கள் பஞ்சமி நிலத்திலுள்ள மண்ணை எடுத்து வருவது அதிகாரிகளுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என குற்றம்சாட்டினர்.
செங்கல் சூளை நடத்த வேண்டுமென்றால் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி சுற்றுச்சுழல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மலைதள பாதுகாப்பு அமைப்பு, வனத்துறை,கனிமம் மற்றும் சுரஙகத்துறை, மின்சார வாரியம், உள்ளிட்ட 9 துறைகளிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே நடத்த முடியும். ஆனால் எவ்வித அனுமதியும் பெறாத செங்கல் சூளைகளை உடனே மூட வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், அனுமதியின்றி செயல்படும் 50 செங்கல் சூளைகளை மூட மாவட்ட ஆட்சியர் கடந்த அக்., 29ம் தேதி உத்தரவிட்ட நிலையில், தொடர்ந்து அந்த சூளைகள் செயல்பட்டு வருவதாக தடாகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

உரிய ஆவணங்களின்றி இயங்கி வரும் செங்கல் சூளையிலிருந்து, சுமார் 4500 செங்கற்களை அதிகப்படியான பாரம் ஏற்றி சென்ற லாரி ஒன்று நேற்று பெரியநாய்க்கன்பாளையம் அருகே ஏற்படுத்திய விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்ததாகக் கூறிய அவர், உடனடியாக செங்கல் சூளைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.