தென்னை மரங்களில் வெள்ளை பூச்சி தாக்குதல்; வங்கி கடனை தள்ளுபடி செய்ய கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு

கோவை: கோவை மாவட்டம் முழுவதும் தென்னை மரங்களில் வெள்ளை பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகி தென்னை, வாழை, எலுமிச்சை, தக்காளி போன்ற உற்பத்தி செய்யப்படும் விலை பொருட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் முழுவதும் தென்னை மரங்களில் வெள்ளை பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகி தென்னை, வாழை, எலுமிச்சை, தக்காளி போன்ற உற்பத்தி செய்யப்படும் விலை பொருட்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு அளித்தனர்.



மேலும், வெள்ளை பூச்சிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வாயில் பச்சை துணி கட்டி, வெள்ளை பூச்சிகளால் பாதித்த தென்னை மட்டைகளை கொண்டு வந்து, மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாரளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், கோவை மாவட்டத்தில் வெள்ளை பூச்சிகளால் தென்னை விவசாயமே பல கோடி ரூபாய் மதிப்பில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கடன் பெற்றவர்கள் வெள்ளை பூச்சி தாக்குதலால் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தனர்.

தமிழக அரசின் பூச்சியியல் துறை கொடுத்த மருந்து பலனளிக்கவில்லை எனவும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகமானதுதான் மிச்சம் என்று தெரிவித்த அவர்கள், விஞ்ஞான ரீதியிலான கண்டுபிடிப்பை மேற்கொண்டு வெள்ளை பூச்சிகளை அழிக்கும் மருந்தை உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.



இந்த வெள்ளை பூச்சிகள் வெளிநாட்டிலிருந்து இருந்து வந்துள்ளதாக பூச்சியியல் துறை அறிக்கை கொடுத்துள்ளதாகவும் இந்திய விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ள அயல்நாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை மத்திய அரசு தடை சட்டம் இயற்ற வேண்டும் என்றும் இதனை மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....