திருப்பூர்: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பொருளாதார சீரழிவு குறித்து குரலெழுப்ப இருப்பதாக திருப்பூரில் நவம்பர் புரட்சி தின பேரணியை துவக்கி வைத்த மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பொருளாதார சீரழிவு குறித்து குரலெழுப்ப இருப்பதாக திருப்பூரில் நவம்பர் புரட்சி தின பேரணியை துவக்கி வைத்த மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

நவம்பர் புரட்சி தினத்தை அனுசரிக்கும் வகையில் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது . இந்த அணிவகுப்பை மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு வெங்கடேசன் துவக்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்: நாளை துவங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியா தற்போது சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார சீரழிவு குறித்து குரலெழுப்ப இருப்பதாகவும் அதேபோல் மத்திய மாநில அரசுகள் கீழடி அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அவிநாசி சாலையில் தொடங்கிய இந்தப் பேரணியில் சுமார் ஆயிரக்கணக்கான சிவப்பு சீருடையில் ஊர்வலமாக வந்து யுனிவர்சல் தியேட்டர் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நவம்பர் புரட்சி தினத்தை அனுசரிக்கும் வகையில் திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது . இந்த அணிவகுப்பை மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான சு வெங்கடேசன் துவக்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்: நாளை துவங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியா தற்போது சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார சீரழிவு குறித்து குரலெழுப்ப இருப்பதாகவும் அதேபோல் மத்திய மாநில அரசுகள் கீழடி அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அவிநாசி சாலையில் தொடங்கிய இந்தப் பேரணியில் சுமார் ஆயிரக்கணக்கான சிவப்பு சீருடையில் ஊர்வலமாக வந்து யுனிவர்சல் தியேட்டர் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.