கோவை: சென்னை ஐ ஐ டி மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.
கோவை: சென்னை ஐ ஐ டி மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

சென்னையில் கடந்த 9 ஆம் தேதி விடுதி அறையில் பாத்திமா லத்தீப் என்ற ஐ ஐ டி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக்கு காரணமான பேராசியர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவு புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மாணவி பாத்திமா லத்தீப்பின் இறப்புக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நிறுவன படுகொலையை கண்டித்தும் ஜாதி, மத ரீதியான பிரச்சனைகளை கண்டித்தும் கோசங்களை எழுப்பி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் கடந்த 9 ஆம் தேதி விடுதி அறையில் பாத்திமா லத்தீப் என்ற ஐ ஐ டி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், பாத்திமா லத்தீப்பின் தற்கொலைக்கு காரணமான பேராசியர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவு புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் மாணவி பாத்திமா லத்தீப்பின் இறப்புக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நிறுவன படுகொலையை கண்டித்தும் ஜாதி, மத ரீதியான பிரச்சனைகளை கண்டித்தும் கோசங்களை எழுப்பி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.