கோவை: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார் எனவும், திமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுவதால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்தார்.
கோவை: வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார் எனவும், திமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுவதால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்தார்.

கோவையில் பத்திரிகையாளர் மன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 2021ல் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து முதலமைச்சராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் எனவும் அதில் மகத்தான வெற்றியும் பெறுவோம் என்றார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலின் தோல்வியில் இருந்து மு.க.ஸ்டாலின் இன்னும் மீளவில்லை எனவும் தமிழகத்தில் தற்போது அரசியல் வெற்றிடம் இல்லை என்றவர், சினிமா துறையில் தான் தற்போது வெற்றிடம் உள்ளதாக தெரிவித்தார்.
எம் ஜி ஆர், சிவாஜிக்கு பிறகு தமிழக சினிமா துறையில் தொடர்ந்து வெற்றிடம் உள்ளது எனவும் மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஆட்சியே தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்த அவர், தமிழக அரசால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அடுத்த கட்ட நகர்வு நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது என்று கூறினார்.
மேலும், அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகள், தொண்டர்கள் சம்மதத்தோடு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்திக்க உள்ளோம் எனவும் அதிமுக தற்போது தெளிவான தலைமையில் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அதிமுக விற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.

கோவையில் பத்திரிகையாளர் மன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 2021ல் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து முதலமைச்சராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் எனவும் அதில் மகத்தான வெற்றியும் பெறுவோம் என்றார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலின் தோல்வியில் இருந்து மு.க.ஸ்டாலின் இன்னும் மீளவில்லை எனவும் தமிழகத்தில் தற்போது அரசியல் வெற்றிடம் இல்லை என்றவர், சினிமா துறையில் தான் தற்போது வெற்றிடம் உள்ளதாக தெரிவித்தார்.
எம் ஜி ஆர், சிவாஜிக்கு பிறகு தமிழக சினிமா துறையில் தொடர்ந்து வெற்றிடம் உள்ளது எனவும் மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஆட்சியே தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்த அவர், தமிழக அரசால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அடுத்த கட்ட நகர்வு நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது என்று கூறினார்.
மேலும், அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகள், தொண்டர்கள் சம்மதத்தோடு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்திக்க உள்ளோம் எனவும் அதிமுக தற்போது தெளிவான தலைமையில் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அதிமுக விற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.