கோவை: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் காய்ச்சல் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுவன் காய்ச்சல் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் சிட்கோ பகுதியில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த சிட்கோ பகுதியிலிருந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் ஒருவாரத்திற்கு என நான்கு முதல் ஐந்து பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
இப்படியிருக்க இன்று திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காய்ச்சல் பாதிப்பினால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் சித்தார்த் (3). இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், குழந்தையின் உடல்நிலை மோசமானதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பின்பு, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் நலப் பிரிவில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும், தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து உறவினர்கள் இறந்த சிறுவனின் உடலை வார்டில் இருந்து பிரேத கிடங்கிற்கு தோளில் தூக்கியபடி கொண்டு வந்தனர்.காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் பலியான சம்பவம் மருத்துவமனையில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை, அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் சிட்கோ பகுதியில் கடந்த சில நாட்களாகவே டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த சிட்கோ பகுதியிலிருந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் ஒருவாரத்திற்கு என நான்கு முதல் ஐந்து பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
இப்படியிருக்க இன்று திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காய்ச்சல் பாதிப்பினால் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் சித்தார்த் (3). இவர் கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், குழந்தையின் உடல்நிலை மோசமானதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பின்பு, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் நலப் பிரிவில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும், தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து உறவினர்கள் இறந்த சிறுவனின் உடலை வார்டில் இருந்து பிரேத கிடங்கிற்கு தோளில் தூக்கியபடி கொண்டு வந்தனர்.காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் பலியான சம்பவம் மருத்துவமனையில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை, அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.