நீலகிரி: பாபர் மசூதி தீர்ப்பு வழங்கப்பட்டதை எதிர்ப்பு தெரிவித்து உதகையில் காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி: பாபர் மசூதி தீர்ப்பு வழங்கப்பட்டதை எதிர்ப்பு தெரிவித்து உதகையில் காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய நிலமான அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பானது நவம்பர் 9ம் தேதி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக உதகையில் பொதுமக்கள் கூடும் இடங்களான கோவில்கள், ரயில் நிலையம் மற்றும் சுற்றுலா தலங்களில் காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லீம் அமைப்பினர் கண்டன கோஷங்களை எழுப்பி உதகை ஏ.டி.சி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் அத்துமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய நிலமான அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பானது நவம்பர் 9ம் தேதி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக உதகையில் பொதுமக்கள் கூடும் இடங்களான கோவில்கள், ரயில் நிலையம் மற்றும் சுற்றுலா தலங்களில் காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லீம் அமைப்பினர் கண்டன கோஷங்களை எழுப்பி உதகை ஏ.டி.சி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் அத்துமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.