நீலகிரி: தேசிய அளவில் கடந்த, 9 மாதங்களில், 100.63 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இந்த அளவு, கடந்த ஆண்டு, 97.92 கோடி கிலோவாக இருந்தது.அதில், வட மாநில உற்பத்தி, 85.24 கோடி கிலோ இருந்தது. அதே நேரத்தில்,தென் மாநிலங்களில், கடந்த ஆண்டு, 15.85 கோடி கிலோ உற்பத்தியான நிலையில், நடப்பாண்டில் இதுவரை, 15.34 கோடி கிலோவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி: தேசிய அளவில் கடந்த, 9 மாதங்களில், 100.63 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.இந்த அளவு, கடந்த ஆண்டு, 97.92 கோடி கிலோவாக இருந்தது.அதில், வட மாநில உற்பத்தி, 85.24 கோடி கிலோ இருந்தது. அதே நேரத்தில்,தென் மாநிலங்களில், கடந்த ஆண்டு, 15.85 கோடி கிலோ உற்பத்தியான நிலையில், நடப்பாண்டில் இதுவரை, 15.34 கோடி கிலோவாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தென் மாநில தேயிலை தூள் உற்பத்தி வீழ்ச்சி அடைந்த போதிலும், வட மாநிலங்களின் உற்பத்தி கணிசமாக உயர்ந்ததால், நாட்டின் மொத்த உற்பத்தி உயர்ந்துள்ளது.அதில், தமிழகத்தில், 11.36 கோடி கிலோ உற்பத்தி இருந்த நிலையில், இந்த ஆண்டு, 10.93 கோடி கிலோ உற்பத்தியானது. 43 லட்சம் கிலோ வீழ்ச்சி கண்டது.

இதுகுறித்து சர்வதேச மேலாண் மை ஆலோசகர் சுந்தர் பேசுகையில், ''தமிழகத்தின் சீதோஷ்ண நிலை, தேயிலை துாள் உற்பத்திக்கு உகந்ததாக இல்லாதது, இதற்கு முக்கிய காரணமாகும்.
ஆனால், நாட்டின் மொத்த உற்பத்தி கணிசமாக உயர்ந்து வரும் சூழ்நிலையில், நடப்பாண்டின் உற்பத்தி கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .கடந்த ஆண்டு, 12 மாதங்களில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 133.86 கோடி கிலோவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த உற்பத்தி சரித்திரத்திலேயே, உயர்ந்த அளவாக இருக்கும்,'' என்றார்.

தென் மாநில தேயிலை தூள் உற்பத்தி வீழ்ச்சி அடைந்த போதிலும், வட மாநிலங்களின் உற்பத்தி கணிசமாக உயர்ந்ததால், நாட்டின் மொத்த உற்பத்தி உயர்ந்துள்ளது.அதில், தமிழகத்தில், 11.36 கோடி கிலோ உற்பத்தி இருந்த நிலையில், இந்த ஆண்டு, 10.93 கோடி கிலோ உற்பத்தியானது. 43 லட்சம் கிலோ வீழ்ச்சி கண்டது.

இதுகுறித்து சர்வதேச மேலாண் மை ஆலோசகர் சுந்தர் பேசுகையில், ''தமிழகத்தின் சீதோஷ்ண நிலை, தேயிலை துாள் உற்பத்திக்கு உகந்ததாக இல்லாதது, இதற்கு முக்கிய காரணமாகும்.
ஆனால், நாட்டின் மொத்த உற்பத்தி கணிசமாக உயர்ந்து வரும் சூழ்நிலையில், நடப்பாண்டின் உற்பத்தி கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .கடந்த ஆண்டு, 12 மாதங்களில், நாட்டின் தேயிலை உற்பத்தி, 133.86 கோடி கிலோவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த உற்பத்தி சரித்திரத்திலேயே, உயர்ந்த அளவாக இருக்கும்,'' என்றார்.