திருப்பூர்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட திருப்பூர் மாநகர அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் ஆர்வமுடன் விருப்ப மனு கொடுக்க குவிந்து வருகின்றனர்.
திருப்பூர்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட திருப்பூர் மாநகர அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் ஆர்வமுடன் விருப்ப மனு கொடுக்க குவிந்து வருகின்றனர்.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் நவ.,15 மற்றும் 16ல் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்டணங்களைச் செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500, பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500ம் விருப்ப மனு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக விண்ணப்பப் படிவங்களை பெறும் கட்சி நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி திருப்பூர் மாவட்டத்தில் மாநகர் மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆனந்தன், செ.ம.வேலுச்சாமி, பா.வே.தாமோதரன் ஆகியோர் தலைமையிலான கட்சி நிர்வாகிகளும் புறநகர் மாவட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், லியாகத்அலிகான், சின்னச்சாமி தலைமையிலான நிர்வாகிகள் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக போட்டியிட எம்எஸ்ம் அனந்தன் விருப்ப மனு செய்துள்ளார். அதேபோல், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான விருப்ப மனுக்களை அதிமுகவினர் விறுவிறுப்பாகவும் ஆர்வத்துடனும் கொடுத்து வருகின்றனர்.

தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் நவ.,15 மற்றும் 16ல் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்டணங்களைச் செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500, பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500ம் விருப்ப மனு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக விண்ணப்பப் படிவங்களை பெறும் கட்சி நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி திருப்பூர் மாவட்டத்தில் மாநகர் மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆனந்தன், செ.ம.வேலுச்சாமி, பா.வே.தாமோதரன் ஆகியோர் தலைமையிலான கட்சி நிர்வாகிகளும் புறநகர் மாவட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், லியாகத்அலிகான், சின்னச்சாமி தலைமையிலான நிர்வாகிகள் விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக போட்டியிட எம்எஸ்ம் அனந்தன் விருப்ப மனு செய்துள்ளார். அதேபோல், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான விருப்ப மனுக்களை அதிமுகவினர் விறுவிறுப்பாகவும் ஆர்வத்துடனும் கொடுத்து வருகின்றனர்.