கோவை: சமுதாய நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் கபீர்புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவை: சமுதாய நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் கபீர்புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டு தோறும் கபீர்புரஸ்கார் விருது வழங்கி வருகிறது.
அதன்படி 2019-20ம் ஆண்டிற்கான கபீர்புரஸ்கார் விருதிற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் வரும் 25.11.2019 - அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.
நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் வகையில் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு இந்திய அரசு ஆண்டு தோறும் கபீர்புரஸ்கார் விருது வழங்கி வருகிறது.
அதன்படி 2019-20ம் ஆண்டிற்கான கபீர்புரஸ்கார் விருதிற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் வரும் 25.11.2019 - அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.