பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பொருட்களை கொடுக்கும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் - திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: திருப்பூரில் பள்ளி மாணவ, மாணவிகள் கொண்டு வரும் பயன்படுத்தப்படாத பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் பள்ளி மாணவ, மாணவிகள் கொண்டு வரும் பயன்படுத்தப்படாத பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.



நெகிழி இல்லா திருப்பூரை உருவாக்க மாவட்ட நிர்வாகமும் பல்வேறு சமூக அமைப்புகளும் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் அரசு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் கொண்டு வரும் பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பென்சில் வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.



மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படாமல் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பென்சில் உள்ளிட்ட பயனுள்ள பொருட்களை வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்த மாவட்ட ஆட்சியர், திருப்பூரில் உள்ள 1374 அரசுப் பள்ளிகளிலும் 600 தனியார் பள்ளிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அதிகப்படியான பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரும் மாணவ மாணவிக்கு எலெக்ட்ரிக் சைக்கிள் வழங்க இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...