கோவை: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்படுத்த வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
கோவை: இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்படுத்த வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், குழந்தைகள் தினமான இன்று பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும் என்று 1098 என்ற இலவச தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3200க்கும் மேற்பட்ட தகவல்களால் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகமாக போக்சோ மட்டும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
1098 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் காணும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர்களின் பெயர்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறிய அவர், அனைத்து பள்ளிகளிலும் இதற்குண்டான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றார்.
மேலும், குழந்தைகள் அனைவரும் தங்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காண 1098 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பிரச்சினைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், குழந்தைகள் உதவிக்குழு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அவர் பேசுகையில், குழந்தைகள் தினமான இன்று பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும் என்று 1098 என்ற இலவச தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3200க்கும் மேற்பட்ட தகவல்களால் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகமாக போக்சோ மட்டும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
1098 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் காணும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர்களின் பெயர்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறிய அவர், அனைத்து பள்ளிகளிலும் இதற்குண்டான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றார்.
மேலும், குழந்தைகள் அனைவரும் தங்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காண 1098 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பிரச்சினைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், குழந்தைகள் உதவிக்குழு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.