கோவை: வால்பாறையில் உள்ள பிரதான சாலைகளில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் உள்ள பிரதான சாலைகளில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரில் உள்ள பிரதான சாலையில் இரு புறமும் நடைபாதைகளிலும் பெரிதும் சிறிதுமாக 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சாலையை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பொதுமக்கள்.அரசு அலுவலர்கள் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில் சமீப காலமாக ஆடு, மாடுகள் சுற்றி வருவதுடன்.சாலைகளின் குறுக்கே செல்வதோடு ரோட்டின் மத்தியில் படுத்து கொள்கின்றன.
மேலும், கழிவுகளை சாலைகளிலேயே கழிப்பதால் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அதேபோல, சாலையில் நிற்கும் மாடுகள் முட்டி விடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் சாலைகளில் செல்ல வேண்டியுள்ளது. இதனால், நகராட்சி அலுவலர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரில் உள்ள பிரதான சாலையில் இரு புறமும் நடைபாதைகளிலும் பெரிதும் சிறிதுமாக 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சாலையை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பொதுமக்கள்.அரசு அலுவலர்கள் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஏராளமான வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில் சமீப காலமாக ஆடு, மாடுகள் சுற்றி வருவதுடன்.சாலைகளின் குறுக்கே செல்வதோடு ரோட்டின் மத்தியில் படுத்து கொள்கின்றன.
மேலும், கழிவுகளை சாலைகளிலேயே கழிப்பதால் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். அதேபோல, சாலையில் நிற்கும் மாடுகள் முட்டி விடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் சாலைகளில் செல்ல வேண்டியுள்ளது. இதனால், நகராட்சி அலுவலர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.