கோவை: சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் அதைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம் சிறப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
கோவை: சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் அதைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம் சிறப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதுடன் உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
மேலும், கடந்த ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன், பெண்ணியம் பேசும் பெண்களை வைத்து, திட்டமிட்டு ஐயப்பன் கோவிலுக்குள் நுழையும் கொடூரத்தை நடத்தினார். அதேபோல, இந்த ஆண்டும் அதே முயற்சியில் ஈடுபடுவார் எனவும் அதே சமயம், ஐயப்ப பக்தர்களாகிய நாங்கள் சபரிமலையின் புனிதம் காப்போம் என்று கூறிய அவர், இதற்கான புனித அறப்போராட்டம் தொடரும் என்றார்.
மேலும், மத்திய அரசாங்கம் ஐயப்பன் கோவில் மலையின் புனிதம் கெடுப்பதை வேடிக்கை பார்க்கக் கூடாது எனவும் சபரிமலையை பாதுகாக்க மத்திய அரசாங்கம் சிறப்புச் சட்டம் உருவாக்க வேண்டும் என தெரிவித்த அவர், சபரிமலையை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.