அதிமுக கொடிகம்பம் விழுந்து பெண் விபத்தில் சிக்கிய விவகாரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது

கோவை: அதிமுக கொடி கம்பம் சாய்ந்து இளம்பெண் விபத்துக்குள்ளாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: அதிமுக கொடி கம்பம் சாய்ந்து இளம்பெண் விபத்துக்குள்ளாக காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 12ம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த விபத்தில் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா படுகாயமடைந்தார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணமென உறவினர்கள் குற்றம்சாட்டினர்.



இந்நிலையில், ராஜேஸ்வரி விபத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



அப்போது, அனுமதியின்றி நடப்பட்ட அதிமுக கொடி கம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணமெனவும், அதற்கான தடயங்களை காவல்துறை அழிக்க முயல்வதாகவும் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் குற்றம்சாட்டினார். மேலும், காவல் துறை அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 



இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...