பிடிபட்டான் அச்சுறுத்தல் மன்னன் 'அரிசி ராஜா' காட்டு யானை

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அர்த்தநாரிபாளையத்தில் மக்களை துன்புறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜா மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அர்த்தநாரிபாளையத்தில் மக்களை துன்புறுத்தி வந்த காட்டு யானை அரிசி ராஜா மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

காட்டு யானை அரிசி ராஜா தாக்கியதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியின் நவமலை, அர்த்தநாரிபாளையம் பகுதிகளில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அரிசி ராஜாவைப் பிடிக்க வேண்டும் என பொது மக்கள் நாலு முக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த சனிக்கிழமை காட்டு யானையை பிடிக்க உத்தரவு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அரிசி ராஜா காட்டு யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட கும்கி யானை பாரிக்கு மஸ்து ஏற்பட்டு மதம் பிடித்ததால் யானை பாகனுக்கு அடிபணிய மறுத்தது. இதனால், கும்கி யானை பாரி லாரியில் ஏற்றப்பட்டு டாப்சிலிப்பில் உள்ள கோழிக்கமுதி யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து, மதம் பிடித்த பாரிக்கு பதிலாக பெருமாள் மலைப்பகுதிக்கு கும்கி கபில்தேவ் கொண்டு வரப்பட்டது. 

அர்த்தனாரி பாளையம் பகுதியில் 4 நாட்களாக முகாமிட்டு இருந்த 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், இரவு நேரத்தில் வெளியே வந்த போது காட்டு யானை அரிசிராஜா பிடிபட்டது.



பருத்தியூர் வனப்பகுதியில் நின்று கொண்டு இருந்த காட்டு யானை அரிசி ராஜாவுக்கு வனத்துறை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் கலீம், கபில்தேவ் ஆகிய கும்கி யானைகள் அரிசி ராஜாவின் கழுத்தில் கயிறுகளை கட்டி அதனை கட்டுப்படுத்தின. 

கடந்த 2017ம் ஆண்டு ஜீன் மாதம் 4 பேரை கொன்றதால் வெள்ளலூர் பகுதியில் பிடிக்கப்பட்டு வரகளியாறுவில் விடுவிக்கப்பட்ட அதே யானைதான், அரிசி ராஜா யானை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.



தொடர்ந்து வனத்துறை வாகனத்தில் ஏற்றப்பட்ட அரிசி ராஜா, டாப்சிலிப் வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. யானைகள் முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டு வளர்ப்பு யானையாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. காட்டு யானை பிடிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....