கோவை: சீக்கியர்களின் மத குருவான குருநானக் தேவ் அவர்களின் 550வது பிறந்தநாள் விழா நேற்று கோவை குருத்வாராவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை: சீக்கியர்களின் மத குருவான குருநானக் தேவ் அவர்களின் 550வது பிறந்தநாள் விழா நேற்று கோவை குருத்வாராவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவையில் உள்ள சர்வ சமயத் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவன தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு, அவர்களும் கலந்து கொண்ட ஒரு மத நல்லிணக்க விழாவாக மிளிர்ந்தது.

குருத்வாரா சிங் சபையில் உள்ளே நுழையும் பொழுதே கட்டித்தழுவி அன்புடன் வரவேற்று கொண்டாடிய அவர்கள், உள்ளே வருபவர்கள் தலையை மறைத்துக் கொண்டு வருவது மற்றும் அவர்களின் மரபு தலை மறைக்க அங்கேயே பலவண்ண துணிகள் தந்து கட்டிவிடவும் செய்தனர்.

பின்னர், அனைவரையும் அழைத்துச் சென்று அவர்கள் வணங்கும் புனித நூல் அருகில் அமர வைத்து, புனித நூலை வணங்கினர். அங்கு பிரார்த்தனை பாடல்களும் பாடப்பட்டன.
இந்த மதநல்லினக்க விழாவில் ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்தின் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம், நாலேஜ் சென்டர் பொறுப்பாளர்கள் பீர் முஹம்மது, அனீஸ், மற்றும் இப்ராஹிம் பாதுஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவையில் உள்ள சர்வ சமயத் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவன தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு, அவர்களும் கலந்து கொண்ட ஒரு மத நல்லிணக்க விழாவாக மிளிர்ந்தது.

குருத்வாரா சிங் சபையில் உள்ளே நுழையும் பொழுதே கட்டித்தழுவி அன்புடன் வரவேற்று கொண்டாடிய அவர்கள், உள்ளே வருபவர்கள் தலையை மறைத்துக் கொண்டு வருவது மற்றும் அவர்களின் மரபு தலை மறைக்க அங்கேயே பலவண்ண துணிகள் தந்து கட்டிவிடவும் செய்தனர்.

பின்னர், அனைவரையும் அழைத்துச் சென்று அவர்கள் வணங்கும் புனித நூல் அருகில் அமர வைத்து, புனித நூலை வணங்கினர். அங்கு பிரார்த்தனை பாடல்களும் பாடப்பட்டன.
இந்த மதநல்லினக்க விழாவில் ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்தின் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம், நாலேஜ் சென்டர் பொறுப்பாளர்கள் பீர் முஹம்மது, அனீஸ், மற்றும் இப்ராஹிம் பாதுஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.